குன்றத்தூரை அடுத்த அய்யப்பன்தாங்கல் ஊராட்சியைச் சேர்ந்த அசோக் பிருந்தாவன் நகர், தனலட்சுமி நகர், சுப்பையா நகர் அனெக்ஸ் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி சாலைகள் மிகவும் மோசமான நிலையில் போக்குவரத்துக்கு தகுதியற்றதாக உள்ளன. சிறுவர் விளையாட்டுப் பூங்காவுக்கென ஒதுக்கப்பட்ட இரு இடங்களில் இதுவரை பூங்கா அமைக்கப்படவில்லை. பாதுகாப்புச் சுவர், விளையாட்டு உபகரணங்கள், போதிய பராமரிப்பின்றி உள்ள சிறுவர் விளையாட்டு பூங்காக்களையும் சீரமைக்க வேண்டும்.
- அசோக், பிருந்தாவன் நகர்.