ஆவடி நகராட்சி 32-ஆவது வார்டு, ரெட்டியார் கார்டன் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இரவு, பகல் என எந்நேரமும் தெருவில் செல்வோரை அச்சுறுத்தியும், குழந்தைகளைக் கடித்து காயப்படுத்தும் நிலை தொடர்கிறது. பொதுமக்களுக்கு இடையூறாகவும், ஆபத்தாகவும் தெருக்களில் சுற்றிச்திரியும் நாய்களை இப்பகுதியில் இருந்து வெளியேற்றி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த ஆவடி பெருநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.கனகவேல், ஆவடி.