சென்னையை அடுத்த பம்மல் பகுதியில் இருந்து குன்றத்தூர் செல்லும் பம்மல் செல்லும் பிரதான சாலையில் பல்லாவரம் நாகல்கேணி பகுதியிலிருந்து வரக்கூடிய குறுகலான சிமெண்ட் சாலையான அண்ணாசாலை இரட்டை பிள்ளையார் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே இணைகிறது. இந்த இடமானது வாகன நெரிசலால் தினமும் சிக்கித் திணறுகிறது. அண்ணாசாலையில் மருத்துவமனை இருப்பதால் அங்கு செல்லும் பொதுமக்கள் அவசர சிகிச்சைக்கு செல்ல முடியாமல் சிரமப்படும் நிலை தொடர்கிறது. இதை சீரமைக்க போக்குவரத்து காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
அதிராஜ், பம்மல்.