திருவொற்றியூர் தபால் நிலையத்தில் உள்ளூர், வெளியூர் "பின்கோடு' எண்களின் பலகை இல்லை. இதனால், மணியார்டர் அனுப்பும்போது பின்கோடு குறிப்பிட்டிருந்தால்தான் வாங்கப்படுகிறது. மேலும், மணியார்டர் அனுப்பும்போது அனுப்புநர், பெறுநர் செல்லிடப்பேசிகளுக்கு பணம் சென்று சேர்ந்த விவரம் அனுப்பப்படுவதில்லை. இதுபோன்ற பிரச்னைகளைக் களைய அஞ்சல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.கே.ஈஸ்வரன், திருவொற்றியூர்.