அண்ணாநகர் }அம்பத்தூர் சாலையில் ஆங்காங்கே பள்ளங்களைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பகலில் இப்பகுதியில் வைக்கப்படும் சாலைத் தடுப்பு இரவு நேரங்களில் அகற்றப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். விபத்து ஏற்படாமல் தடுக்க உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.