தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகளில் பெயர்கள் மட்டுமே எழுதப்படுகின்றன. ஊர் பெயர்கள் எழுதப்படுவதில்லை. இதனால், அந்த வழியே செல்வோர், குறிப்பாக பேருந்துகளில் பயணிப்போருக்கு எந்த ஊரில் இருக்கிறோம் என்பது தெரிவதில்லை. மேலும், அந்தக் கடையின் முகவரியைக் கண்டுபிடிப்பதும் சிரமமாக உள்ளது. எனவே, ஊர் பெயர்களையும் சேர்த்து எழுத வியாபாரிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.