தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 692

ஹரி கிருஷ்ணன்

‘உள்ளத்திலே புகுந்தருளவேண்டும்’ என்று இறைவனை வேண்டுகின்ற இந்தப் பாடல் முள்வாய் என்னும் தலத்துக்கானது.  இத்தலம் ஆந்திராவில் சித்தூருக்கு அருகில் உள்ளது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் ஒரு குறில், ஒரு கணக்கில் சேராத மெல்லொற்று, ஒரு நெடில் என மூன்றெழுத்துகளையும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் ஐந்து குற்றெழுத்துகளையும் கணக்கில் சேராத இரண்டு மெல்லொற்றுகளையும் கொண்டவை.


தன்னா தனந்தனந்த தன்னா தனந்தனந்த
      தன்னா தனந்தனந்த                 தனதான

மின்னார் பயந்த மைந்தர் தன்னா டினங்கு விந்து
         வெவ்வே றுழன்று ழன்று         மொழிகூற

      விண்மேல் நமன்க ரந்து மண்மே லுடம்பொ ருங்க
         மென்னா ளறிந்த டைந்து         உயிர்போமுன்

பொன்னார் சதங்கை தண்டை முந்நூல் கடம்ப ணிந்து
         பொய்யார் மனங்கள் தங்கு       மதுபோலப்

பொல்லே னிறைஞ்சி ரந்த சொன்னீ தெரிந்த ழுங்கு
         புன்னா யுளுங்க வின்று          புகுவாயே

பன்னா ளிறைஞ்சு மன்பர் பொன்னா டுறங்கை தந்து
         பன்னா கணைந்து சங்க           முறவாயிற்

பன்னூல் முழங்க லென்று விண்ணோர் மயங்க நின்று
         பண்ணூ துகின்ற கொண்டல்      மருகோனே

முன்னாய் மதன்க ரும்பு வின்னேர் தடந்தெ ரிந்து
         முன்னோர் பொருங்கை யென்று முனையாட

மொய்வார் நிமிர்ந்த கொங்கை மெய்ம்மா தர்வந்தி றைஞ்சு
         முள்வாய் விளங்க நின்ற         பெருமாளே

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

SCROLL FOR NEXT