‘உனது திருவடிகளை நினைக்கவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவாரூருக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 23 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; ஐந்தாம் சீரில் இரண்டு நெடில், ஒரு குறில் என மூனறெழுத்துகளும்; ஆறாம் சீரில் இரண்டு குறில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என இரண்டெழுத்துகளும் அமைந்துள்ளன.
தனதன தனன தனதன தனன
தானான தந்த தனதான
மகரம துகெட இருகுமி ழடைசி
வாரார்ச ரங்க ளெனநீளும்
மதர்விழி வலைகொ டுலகினில் மனிதர்
வாணாள டங்க வருவார்தம்
பகர்தரு மொழியில் ம்ருகமத களப
பாடீர கும்ப மிசைவாவிப்
படிமன துனது பரிபுர சரண
பாதார விந்த நினையாதோ
நகமுக சமுக நிருதரு மடிய
நானாவி லங்கல் பொடியாக
நதிபதி கதற வொருகணை தெரியு
நாராய ணன்றன் மருகோனே
அகனக கனக சிவதல முழுது
மாராம பந்தி யவைதோறும்
அரியளி விததி முறைமுறை கருது
மாரூர மர்ந்த பெருமாளே.