தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 926

ஹரி கிருஷ்ணன்

‘ஆசை அறவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பழநிக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 36 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, இரண்டு, ஆறு, ஏழு ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும்; மூன்று, நான்கு, எட்டு, ஒன்பது ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலும், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக இரண்டெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதனன தனதனன தானத் தானத்            தனதானா

ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத்        துணரேனே

      உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் தறியேனே

பெருபுவியி லுயர்வரிய வாழ்வைத் தீரக்       குறியேனே

      பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் தவிரேனோ

துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப்              பெருமாளே

      தொழுதுவழி படுமடியர் காவற் காரப்    பெருமாளே

விருதுகவி விதரணவி நோதக் காரப்           பெருமாளே

      விறன்மறவர் சிறுமிதிரு வேளைக் காரப் பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT