தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 938

ஹரி கிருஷ்ணன்

‘யமன் வரும்போது அடியேனைக் காத்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கு உரியது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் என மூன்று எழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதனத் தானனத் தனதனத் தானனத்

      தனதனத் தானனத்                  தனதான

கயல்விழித் தேனெனைச் செயலழித் தாயெனக்

         கணவகெட் டேனெனப்           பெறுமாது

      கருதுபுத் ராஎனப் புதல்வரப் பாஎனக்

         கதறிடப் பாடையிற்              றலைமீதே

பயில்குலத் தாரழப் பழையநட் பாரழப்

         பறைகள்கொட் டாவரச்           சமனாரும்

      பரியகைப் பாசம்விட் டெறியுமப் போதெனைப்

         பரிகரித் தாவியைத்              தரவேணும்

அயிலறச் சேவல்கைக் கினிதரத் தோகையுற்

         றருணையிற் கோபுரத்            துறைவோனே

      அமரரத் தாசிறுக் குமரிமுத் தாசிவத்

         தரியசொற் பாவலர்க்             கெளியோனே

புயலிளைப் பாறுபொற் சயிலமொய்ச் சாரலிற்

         புனமறப் பாவையைப்            புணர்வோனே

      பொடிபடப் பூதரத் தொடுகடற் சூரனைப்

         பொருமுழுச் சேவகப்             பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT