எண்ணி மகிழ்ந்து
எண்ணில்லா
இலக்கியங்கள்
எழுதிவைத்த
பெரியோர்கள்
எம்மண்ணில்
பிறந்துவர
“என்ன தவம் செய்தேன்”
அள்ளிப் பருகிட
அருந்தமிழை
எனக்களித்த
என்அன்னை
மணிவயிற்றில்
நான்வந்து
பிறப்பதற்கு
என்ன தவம் செய்தேன்
நலந்தேடும்
அயல்நாட்டோர்
நாம்தந்த “யோகாவை”
நாள்தோறும்
கற்றிடவே
நம்நாட்டை
நாடுதற்கு
என்ன தவம் செய்தேன்
இன்னும் ஆயிரமாய்
இருக்கிறது சொல்வதற்கு
எண்ணுகிற
தமிழ் நமக்கு
நல்வரமாய்
மாறுதற்கு
“என்ன தவம்” செய்தேன்