கவிதைமணி

பெண் எனும் பிரபஞ்சம்: -பெருமழை விஜய்

கவிதைமணி

பூவையரால் பூவுலகம்!
மங்கையரால் மண்ணுலகம்!
நிலவொத்தவரால் நிலவுலகம்!
அவர் நினைவால் நில்லாவுலகம்!

உலகமே பெண்டிரால்...
உண்மை இதுதானே!
இருளாமல் வாழ்க்கையை...
ஒளியாக்குவதும் அவர்தானே!

அன்பை...  ஆதரவை...
பண்பை...   பாசத்தை...
உண்மை...நேர்மையினை...
உணர்த்துவதும் அவர்தானே!

கத்திதான் பெண்ணென்றாலும்
கவனமுடனே    நாம்
அணுகினால் ஆனந்தமே!
அவளே பேரானந்தமே!

மண்ணில்    மகிழ்வுறவே
மனதெலாம் காதல்வேண்டும்!
கொடுப்பது   பெண்ணினமே
குவலயமே    அவர்வசமே!

இருப்பதா?    போவதா?வென்று
இடர்ப்படு    வோரையும்
தடுத்துச்   சுகமளிக்கும்
தக்காரும் பெண்களன்றோ?!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT