கவிதைமணி

நிலா விடு தூது: கவிஞர் இரா .இரவி

கவிதைமணி

சங்க காலத்தில் இருந்தது நிலா விடு தூது 
சிறப்பான இக்காலத்தில் அலைபேசி விடு தூது !

தகவல் தொடர்பு இல்லாத காலத்தில் 
தலைவி நிலாவைத் தூது விட்டாள் அன்று !

அமெரிக்காவில் இருந்துக் கொண்டே இன்று
அலைபேசியில் முகம் பார்த்துப் பேசுகிறாள் !

நிலாவில் நீர் உள்ளது என்று இன்று
நன்றாக ஆராந்து அறிவித்தான் தமிழன் !

நிலாவிற்கு அன்றே ஈரமுண்டு என்றுதான் 
நங்கை அதனை தலைவனுக்குத் தூது விட்டாள்  ! 

நிலவை சாட்சியாக வைத்து காதலித்த 
நீங்காத நினைவுகள் காதலருக்கு உண்டு !

நிலவு பார்த்ததே என்றே பயத்தால்
நின் கரம் பிடித்தேன் என்றவர்கள் உண்டு !

நிலவுக்கும் காதலுக்கும் அன்றும்  என்றும் 
நெருங்கிய தொடர்பு உண்டு !

நிலவு பேசாது தன்னோடு பேசியதாக 
நாளும் கற்பனை செய்பவர்கள்  உண்டு !

நிலா விடு தூது இன்று காதலர்களிடையே 
நின்று விட்டப்  போதிலும் இன்றும் !

நிலாவின் மீதான காதல் காதலர்களுக்கு 
நாளும் இருந்துக் கொண்டே இருக்கின்றது ! 

புதுமண  இணைகள் செல்லும் சுற்றுலாவை
புதுமையாக தேன்நிலவு என்று பெயர் வைத்தனர் !

இனி வருங்காலத்தில் புதுமண  இணைகள்
இனிய நிலாவிற்கே சென்று வரும் காலம் வரும் !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

SCROLL FOR NEXT