கவிதைமணி

தாலாட்டு: முகில் வீர உமேஷ்

கவிதைமணி

தால் ஆட்டி
தாலாட்டிய- என்
தாயைப் போல் யாருளர்?
தால் ஆட்டி
தாலாட்டில்- என் துயில்
தாகம் தீர்த்தவர் யாருளர்?

தெய்வத்தைக் கூடப் பிள்ளையாக்கி
பாடியது எங்கள் குலம்
அந்தப்பிள்ளைத் தமிழில்
அன்பைச் சுமந்து
இன்பத்தில் திளைத்து
இதயம் நனைத்ததும்
இன்பத் தமிழ்க் குலம்- எனை
ஈன்ற குலத்துக்கு, தேன்
ஈயாய் பயணிக்கும், மென்னிதயம்

ஈர்க்கும் வகையால்
மகிழ்ச்சியைத் தருவது
நகை ஒன்று தான் – அந்த
நகைக் கூட்ட
குழவி மொழி
குழறக் கேட்பது தான்.

குழறும் முன்பு
தாலை ஆட்டிடும்
தாலாட்டு- உலகத்
தமிழ் வீட்டில்
தாலாட்டுப் பாடாத
தாயாரும் உளரோ ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT