கவிதைமணி

மறு ஜென்மம்: கே.நடராஜன்

கவிதைமணி

நெரு நெல் உளனொருவன் இன்று இல்லை 
என்னும் பெருமை படைத்த இந்த உலகில்
இரவில் கண்ணுறங்கி மீண்டும் கண் விழிக்கும் 
அந்த இனிய காலை நேரமே நம் யாவருக்கும் ஒரு 
மறு ஜென்மம் !  மறுக்க முடியுமா இந்த உண்மையை ?

கிடைத்தது ஒரு  அரிய மனிதப் பிறவி ...தெரியும் இந்த
உண்மை நமக்கு ! தினமும்  காலையில் நாம் 
எடுப்பது ஒரு மறு  ஜென்மம் ! இதுவும் தெரியும் நமக்கு !

இருக்கும் அந்த ஒரே ஒரு  நாளில் மறக்கலாமா 
நாம் மனித நேயம் ? 

தினம் காணும் மறு ஜென்ம விடியல் மறந்து 
வேறு ஒரு புது  ஜென்ம மாய வலையில் 
சிக்கி, கிடைத்த மனிதப்   பிறவியின்  மதிப்பைக்  
குறைக்க வேண்டாமே நாம் !

மனிதராய் பிறந்தோம் ...மனிதராகவே 
வாழ்ந்து காட்டுவோம் ! அது ஒன்றே நமக்கு 
கிடைத்த மனிதப் பிறவியின் பயன் ! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT