கவிதைமணி

விடுதலை : என். நடராஜன்

கவிதைமணி

சும்மாவா கிடைத்தது விடுதலை நம் நாட்டுக்கு ?

விடுதலைக்கு வித்திட்டு அறப்போர் நடத்திய
நம் முன்னோர் பலர் சுதந்திரக் காற்றை
சுவாசிக்காமலே மறைந்தது சோகம் !
இன்று சுதந்திரக் காற்று சுவாசிக்கும்
நம்மில் பலர் நம் விடுதலை போராட்ட
வரலாறு மறந்ததும் வேதனை ...வேதனை !
நம் முன்னோர் நமக்கு பெற்று தந்தார் நம்ம நாட்டு 
விடுதலை ! விடுதலை கிடைத்த மகிழ்ச்சிக்
களிப்பில்  நாம் இது வரை  திளைத்தது போதும் ! இனி
விதிவிலக்கு  ஏதும் இல்லாத  ஒரு விதிமுறை மாற்றம் நம்
மண்ணில் அரும்ப நாம்  விதைக்க வேண்டும் ஒரு வித்து
நம் மண்ணில் ! வளரும்  தலைமுறைக்கு நாம் போராடி
பெற்று தர வேண்டும் மீண்டும் ஒரு விடுதலை! ... நம் 
மண்ணுக்கு வேண்டும் விடுதலை... ஊழல்
சாம்ராஜ்ய அரசியலில் இருந்து !
நம் மண்ணுக்கு வேண்டும் விடுதலை... சாதி மத
பேத அரசியல் ஆதிக்கத்திலிருந்து !
நம் மண்ணுக்கு வேண்டும் விடுதலை ...
கண்ணென போற்றும் கல்வியை காசாக்கும்
நாசக்  கயவர் பிடியிலிருந்து !
நம் மண்ணுக்கு வேண்டும் விடுதலை ...
இன மதவாத தீவிரவாத கூட்டத்தின்
மிரட்டலிலிருந்து !
எடுப்போம் சபதம் நாம் இன்று ...
தொடுப்போம் ஒரு அறப்போர் மீண்டும் !
எதிர்வரும் தலைமுறைக்கு நாம் மாற்றிக்
கொடுப்போம்   ஒரு புதிய பாரத தேசத்தை !
விடுதலையின் புது விளக்கம் வரும் 
தலைமுறைக்கு பழக்கமாக மாறட்டும் !
விடியட்டும் ஒரு புதிய காலை! நம்
வளரும் தலை முறை சுவாசிக்கட்டும் மாசில்லா
புதிய  விடியல் காற்றை ஒரு தடையும் இல்லாமல் !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT