கவிதைமணி

 விடுதலை: -ரெத்தின.ஆத்மநாதன்,

கவிதைமணி
கொடிய விலங்குகளைக்
கூண்டைவிட்டு வெளியே விட்டால்
கொண்டாடி அவையுந்தான்
கூடித்திரியும் சுதந்திரமாய்!
நாட்டுமக்கள் விடுதலையோ
நல்லாட்சி நல வாழ்வில்!
பாட்டுப்பாடி வாழ்ந்த காலம் 
பரிணமிக்குமா இனியுந்தான்!
ஆட்சிசெய்ய வருவோரெல்லாம்
அப்பழுக்    கற்றவராய்
வாழ்ந்த    காலமின்று
வரலாறாகிப்  போனதையோ!
குற்றவாளி     இவரென்று 
உச்சநீதி   மன்றமே
உறுதியாய்ச் சொன்ன பின்பும்
வேறென்ன வேண்டுமிங்கு?!
மாண்புமிகு    என்றாலே
மதிப்புமிகு    என்பதுபோய்
கேடான வார்த்தையாய் அது
கீழாகிப்  போனதையோ!?
பணத்துக்காய்  கூவத்தூரில்
பரதேசிகளாய்  வாழ்ந்தவர்கள்
பண்புள்ள        இம்மண்ணில்
படுக்கவும்     தகுதியற்றவர்கள்!
நாலரை   ஆண்டுகள்
நல் மண்ணை இவராண்டால்
மீத்தேன்    கார்பனெல்லாம்
மேலெழும்பி   நாடழியும்!
வேண்டாம்    இவராட்சி
வேதங்களும்  தாங்காது!
மொத்தமாய்  இவரொழிந்தால்
முகிழ்க்கும் விடுதலை தமிழகத்தில்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT