கவிதைமணி

விடுதலை: பொன். குமார்

கவிதைமணி

விடுதலைப் பெற்ற நாட்டில்
வாழ்ந்து கொண்டிருந்தாலும்
பலவற்றிலிருந்து 
மக்களுக்குத் தேவைப் படுகிறது
விடுதலை.

வறுமைப் பிடியிலிருந்து
விடுதலைப் பெற வழியின்றி
வாடிக் கொண்டிருக்கிறார்கள்
பல கோடியர்.

அலுவல் பிடியிலிருந்து
அனேகருக்குத் தேவை
விடுதலை.

பசியிலிருந்து
மக்களுக்கு எப்போதும்
கிடைப்பதில்லை
விடுதலை.

விடுதலை நாளில் கூட
மக்களிடம் இருப்பதில்லை
விடுதலை உணர்வு.

அன்னியரிடமிருந்து
விடுதலைப் பெற்றிருந்தாலும்
அடிமைப் படுத்தியே 
மக்களை வைத்துள்ளார்கள்
அரசியல்வாதிகள்.

ஆங்கிலேயரைப் போலவே
ஆட்சியாளர்களும்
ஜனநாயகப் போர்வையில்
அதிகார ஆட்சிச் செய்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT