கவிதைமணி

வீர மங்கை : கே.நடராஜன்

கவிதைமணி
முறம் கொண்டு விரட்டினாள் ஒரு புலியை  அன்று வீர மங்கை ஒருத்தி ...புலி புற முதுகு காட்டி ஓடியது முறம் பார்த்து அல்ல !... முறம் பிடித்த மங்கையின் முகம் பார்த்து ! மங்கையரின் வீரம் தெரியும் அவர் முகத்தில் ...செயலில் ! விண்வெளியில் பயணித்த முதல் பெண்ணும்   அந்த விண்ணுக்கு விண்கோள் ஏவும்  நம் பெண்மணிகள் வரை ஒரு ஒரு மங்கையும் வீர மங்கையே !இல்லறத்தை ஒரு நல்லறமாக உருவாக்கி நல்ல ஒரு சந்ததியை இந்த உலகுக்கு கொடுக்கும் ஒரு ஒரு இல்லாளும் ஒரு வீர மங்கையே !  வீர தீர செயல் தேவையில்லை ஒரு பெண்ணுக்கு   வீர மங்கை பட்டம் பெற !தன் கண் முன்னே கருகும் பயிர் கண்டும் தான் வாடாமல் தன் பிள்ளைக்கும் தன் குடும்பத்துக்கும் அரை வயிற்று கஞ்சி கொடுக்கும் ஒரு உழவனின் இல்லாள் ஒரு வீர மங்கையே !படிப்பு வாசனையே இல்லாமல் ஒரு குடிகார கணவனுடன்  குடும்பம் நடத்தி தான் பெற்ற குழந்தைகளை இந்த அவையத்துமுந்தி இருக்க செய்யும் இலக்கில்  நாளும் உழைக்கும் ஒரு ஒரு தாயும்  வீர மங்கைதான் என்  பார்வையில் ! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT