கவிதைமணி

நிழல் தேடி:  ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்,

கவிதைமணி

நீதியைத் தேடும்
முயற்சியில் சோர்ந்து
அநீதிக்கு
அடிபணிவது...

வெற்றிப் பயணத்தில்
வரும் இடர் கண்டு
தோல்வியின் பாதையில்
துணிவாய் நடப்பது...

மாநில முதல்வனாய்
வரவிரும்பியவன்
படிப்பை மறந்து
குறுக்கு வழி தேடுவது...

எரியும் நெருப்புக்கு
பயந்து ஓடியவன்
எண்ணெய் கொப்பரைக்குள்
குதிக்க முயல்வது...

இத்தனையும் தவறென்றால்
நிஜங்கள் இருக்க
நிழல் தேடி ஓடும்
நம் மனநிலையும் தவறே

நிஜமாய் உழைப்பவர்
நிழலாய் நடிப்பவர்
நிழலைத் தவிர்த்து நிஜம் தேடு
முன்னேறும் நம் நாடும் வீடும் !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT