கவிதைமணி

நிழல் தேடி: எஸ்.சுரேஷ்பாபு

கவிதைமணி

பசியாற 
நிழல் தேடினான்!
மரத்தை வெட்டியவன்!

அகலமானது சாலைகள்!
நிழல் தேடின
பறவைகள்!

இலையுதிர்த்த மரங்கள்!
கொளுத்தும் கோடை!
நிழல் தேடின பறவைகள்!

நிழலைத் தேடி
புறப்பட்டனர் பெற்றோர்
முதியோர் இல்லங்கள்!

நிழலைத் தேடி
பாலங்கள் அடியில் அமர்ந்தது
நாடோடிக் கூட்டம்!

கோடை வெயில்
தண்ணீர் பந்தலில் நிழல் தேடியது
தெரு நாய்!

வெட்டப்பட்ட மரங்கள்
வண்டியில் ஏற்றப்பட்டன
தொலைந்து போனது நிழல்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

SCROLL FOR NEXT