கவிதைமணி

குழந்தையின் குரல்: கவிஞர் இரா .இரவி

கவிதைமணி

குழந்தையின் குரல் கேட்டுப் பாருங்கள் 
கவலைகள் காணாமல் போகும் பாருங்கள் !

புல்லாங்குழலை விட இனிமையானது என்றும் 
பழைய யாழை விட இனிமையானது என்றார் வள்ளுவர் !

இனிமையான குரலால் கேட்பவர்களின் 
இதயத்தைக் கொள்ளை அடிப்பார்கள் !

குழந்தையின் குரலை கூர்ந்து கவனியுங்கள்
கற்கண்டு  கரும்பின் இனிப்பு  இருக்கும் !

கள்ளம் கபடம் இல்லாதது என்றும் 
கேட்டிட எவருக்கும்  இனிமை மிக்கது !

குழந்தையின் குரலில் நகைச்சுவை  இருக்கும் 
குழந்தையின் குரலில் நற்கருத்து   இருக்கும் !

குழந்தையின் குரலில் காந்த சக்தி  இருக்கும் 
குழந்தையின் குரலில் குதூகலம்  இருக்கும் !

குழந்தையின் குரலில் உண்மை   இருக்கும் 
குழந்தையின் குரலாய் அலட்சியம் செய்யாதீர் !

பிழையாக உச்சரித்தாலும் சுவை இருக்கும் 
பிறர்மனம் கவரும் வண்ணம் இருக்கும் !

மனதில் பட்டதை அச்சமின்றி உரைக்கும்  
மண்ணில் வாழும் தேவதை குழந்தை !

பிறந்தவுடன் குழந்தை குரல் தர வேண்டும் 
பிறந்த குழந்தை அழவில்லை எனில் சிரமம் !

பிறந்ததும் குழந்தையின் குரல் வந்தால்தான் 
பிரசவம் என்பது நிறைவாக அமையும் !

அழுது பிறக்கும் குழந்தை வாழ்க்கை மற்றவர் 
அழுது புலம்பிட இறப்பில் முற்றுப் பெறும் !

அழுகையில் தொடங்கி அழுகையில் முடியும் 
அர்த்தமுள்ள வாழ்வு அனைவருக்குமான வாழ்வு !

குடும்பம் மட்டும் அழுதால் தன்னலவாதி 
கூடி  ஊரே அழுதால் பொதுநலவாதி !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT