கவிதைமணி

யுத்தம் செய்யும் கண்கள்: -ஆ. செந்தில் குமார்

கவிதைமணி
கூடித் திரிந்த தலைவனின் பிரிவைகடுகின தளவு விரும்பாத் தலைவிஊடல் கொண்டு பசலை நோயுற்றுநெடுங் கடலோடி உழன்று தலைவன்தேடிச் சேர்த்துக் கொணர்ந்த செல்வத்தைகருத்தில் சற்றும் இருத்திக் கொள்ளாதுகூரிய வாளின் நுனியை யொத்தசீரிய கண்களால் யுத்தம் செய்தாள்!கனல் கணையொத்த தலைவியின் பார்வையைகண்ணால் சந்திக்க இயலாத் தலைவன்பார்வையைச் சற்று வேறிடம் திருப்பிபரிவுடன் தலைவியை அகத்தால் நோக்கிபோர் பலப்புரிந்து மிகவும் வலுத்தஇரும்பினை யொத்ததன் இருகரம் கொண்டுவாரி யணைத்துக் கண்ணீர் துடைத்துகார்மேகக் கூந்தலை வருடிக் கொடுத்தான்!கண்களால் யுத்தம் செய்தத் தலைவிகணவனின் அணைப்பை மிகவும் விரும்பிகோபக் கனலைச் சற்றுக் குறைத்துதாபம் கொண்ட அகமும் குளிர்ந்துமுகம் வாடியத் தலைவனினன்பை மதித்துஇகமும் பரமும் பிரியா திருக்கஇறைவனை நினைத்து வேண்டித் தொழுதுஅறமும் அன்பும் நிலைக்கக் கேட்டாள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

SCROLL FOR NEXT