கவிதைமணி

யுத்தம் செய்யும் கண்கள்: -கோ. மன்றவாணன்

கவிதைமணி

வேல்விழி என்றும்
வாள்விழி என்றும்
புலவர்கள் சொன்னபோதே
புரிந்தது
போர்செய்யும் கண்கள் இவையென்று

மாமன்னர்களும்
மகாகவிஞர்களும்
போரில் தோற்றவர்களே
அந்தரங்க வரலாறு
அவிழ்க்கப்பட்டால்

ராணுவ ரகசியங்களைக்
ராத்திரியில் கைப்பற்றும் ராசி
பெண்ணுக்கு உண்டு
அவளின்
கண்ணுக்கு உண்டு

நீர்மூழ்கிக் கப்பல்போல்
வெளித்தெரியாமல் சென்று
வீழ்த்தும் சக்தி
விழிகளுக்கு உண்டு
வீழ்ந்தவர் சொன்ன மெய்யிது

கவிபேசும் கண்களுக்குள்
ஆயத்தமாய் இருக்கும்
ஆயுதக் கிடங்கு

தோற்றுப் போவதே
சுகம்
யுத்தம் செய்யும் கண்களிடம்
சரண்அடைந்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT