கவிதைமணி

யுத்தம்செய்யும்கண்கள் - மஹாரதி

கவிதைமணி
யுத்தம் செய்யும் கண்களுக்குள் நித்தமொரு பித்தம்கொத்து மலர்க் கொத்துவதில் ரத்தம்நிதம் கொட்டும்ரத்தினத்துச் சித்திரத்தில் முத்தமிடும் வெட்கம்சித்திரைப்பூ முத்திரையாய்த் தத்திவரும் சொர்க்கம்யுத்தம் செய்யும் கண்களுக்குள் மன்மதனின் ஆயுதம்சித்தமதைக் கட்டிவைக்கும் சித்துலீலை ஆயிரம்பற்றவைக்கும் கற்றைக்குழல் சுற்றிவரும் கோலம்கட்டழகுக் கட்டிலிலே கத்துங்கடல் ஆழம்யுத்தம்செய்யும் கண்களுக்குள் முத்தமிடும் போதுசத்தமுடன் தத்தையவள் யுத்தம் செய்வதேது?மத்துபடும் கட்டித்தயிர்கொட்டி வைத்தமேனிமற்றதெல்லாம் விட்டிடுவான் மன்மதனின் ஞானியுத்தம் செய்யும் கண்களுக்குள் காமன் கீதைச் சொல்லுவான்புத்தம் புதுபுத்தபுதுப்பூக்கள் ஏவிக் கொல்லுவான்யுத்தமிங்கே குற்றமில்லை தோற்றவனே வெல்லுவான்வற்றாத குற்றால அருவியெனத் துள்ளுவான்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT