நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 7

செ.குளோரியான்

யான்ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன்,
தான்ஒட்டிவந்து என் தனிநெஞ்சை வஞ்சித்து
ஊன்ஒட்டி நின்று என் உயிரில் கலந்து இயல்-
வான் ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே?

'எம்பெருமானை எனக்குள் இருத்துவேன்' என்று நான் எண்ணவில்லை, எனக்குள் இருக்கவேண்டும் என்றெண்ணி அவனே வந்தான், தனிமையிலிருக்கும் என் நெஞ்சை வஞ்சித்தான், உடலிலும் உயிரிலும் கலந்தான், இத்தகைய தன்மைகொண்ட எம்பெருமானைவிட்டு நான் விலகிச்செல்ல முயன்றால், அவன் சம்மதிப்பானா? (மாட்டான்!)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT