ஏற்கும் பெரும்புகழ் வானவர் ஈசன் கண்ணன்தனக்கு
ஏற்கும் பெரும்புகழ் வண்குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும்புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்லவல்லார்க்கு இல்லை சன்மமே.
தகுதிமிக்க பெரும்புகழைக் கொண்ட பெருமான், வானவர்களின் தலைவன், கண்ணன், எம்பெருமான், அப்பெருமானை, தகுதிமிக்க பெரும்புகழைக் கொண்ட, வளம் நிறைந்த குருகூர்ச் சடகோபன் தகுதிமிக்க பெரும்புகழைக் கொண்ட ஆயிரம் பாடல்களால் பாடினார், அவற்றுள், தகுதிமிக்க பெரும்புகழைக் கொண்ட இந்தப் பத்து பாடல்களையும் சொல்லவல்லவர்களுக்கு இன்னொரு பிறப்பு இல்லை.