நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 4

செ.குளோரியான்

எப்பொருளும் தானாய் மரகதக்குன்றம் ஒக்கும்,
அப்பொழுதைத் தாமரைப்பூ கண், பாதம், கை கமலம்,
எப்பொழுதும் நாள், திங்கள், ஆண்டு, ஊழிஊழிதொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே.

எப்பொருளும் தானாகவே திகழும் எம்பெருமான், மரகதக்குன்று போன்றவன், அவனது திருக்கண்கள், அப்பொழுது மலர்ந்த தாமரையைப் போன்றவை, திருவடிகளும் திருக்கைகளும் தாமரை போன்றவை, எந்த நேரமும், எந்த நாளும், எந்த மாதமும், எந்த வருடமும், ஊழிஊழியாக எப்போதும் அவனை நான் கொண்டாடுவேன், அந்தந்தக் கணத்தில் கிடைக்கிற (புதிய), திகட்டாத அமுதமாகத் திகழ்வான் அவன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT