நாள்தோறும் நம்மாழ்வார்

ஐந்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 11

செ.குளோரியான்

பாடல் - 11

நாமங்கள் ஆயிரம் உடைய நம்பெருமான் அடிமேல்
சேமம்கொள் தென்குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
நாமங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமம்கொள் தென் நகர்மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.

ஆயிரம் திருநாமங்களைக்கொண்ட நம்பெருமானின் திருவடிகளையே காப்பாகப் பற்றியவர் தென்குருகூர்ச் சடகோபன், அவர் ஆராய்ந்து உரைத்த ஆயிரம் திருப்பாடல்களும் அப்பெருமானின் ஆயிரம் திருநாமங்களைப்போன்றவை, அவற்றுள், பக்தர்களைக் காக்கும் திருவல்லவாழ் என்னும் திருநகரத்தின்மீது அமைந்த இந்தப் பத்துத் திருப்பாடல்களையும் சொல்கிறவர்கள் இந்தப்  பிறப்பிலேயே சிறந்தவர்களாவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படி தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT