பாடல் 2
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
கார் ஏழ், கடல் ஏழ், மலை ஏழ், உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே.
திருப்பேர் நகரிலே எழுந்தருளியிருக்கின்ற பெருமான் இன்றைக்கு வந்தான், என் நெஞ்சில் நிறையும்படி புகுந்தான், ’இங்கிருந்து ஒருபோதும் விலகிச் செல்லமாட்டேன்’ என்றான், ஏழு மேகங்கள், ஏழு கடல்கள், ஏழு மலைகள், ஏழு உலகங்களை உண்டபிறகும் நிறையாத திருவயிற்றை உடைய அந்தப் பெருமானை நான் முழுக்கப் பற்றிக்கொண்டேன், அவருடைய அன்புக்குப் பாத்திரமானேன்.