நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 2

செ.குளோரியான்

பாடல் 2

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
கார் ஏழ், கடல் ஏழ், மலை ஏழ், உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே.

திருப்பேர் நகரிலே எழுந்தருளியிருக்கின்ற பெருமான் இன்றைக்கு வந்தான், என் நெஞ்சில் நிறையும்படி புகுந்தான், ’இங்கிருந்து ஒருபோதும் விலகிச் செல்லமாட்டேன்’ என்றான், ஏழு மேகங்கள், ஏழு கடல்கள், ஏழு மலைகள், ஏழு உலகங்களை உண்டபிறகும் நிறையாத திருவயிற்றை உடைய அந்தப் பெருமானை நான் முழுக்கப் பற்றிக்கொண்டேன், அவருடைய அன்புக்குப் பாத்திரமானேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT