பாடல் 3
பிடித்தேன், பிறவி கெடுத்தேன், பிணி சாரேன்,
மடித்தேன் மனைவாழ்க்கையுள் நிற்பது ஓர் மாயையை,
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப்பேரான்
அடிச் சேர்வது என் எனக்கு எளிது ஆயினவாறே.
எம்பெருமானின் திருவடிகளைப் பிடித்தேன், அவருடைய அருளாலே என்னுடைய பிறவி நோயைப் போக்கிக்கொண்டேன், இனி எனக்கு நோய்கள் வராதபடி செய்துகொண்டேன், குடும்ப வாழ்க்கையிலே இருக்கிற மாயையை விலக்கிக்கொண்டேன், கொடிகள் பறக்கும் கோபுரங்களோடு மாடங்கள் சூழ்ந்த திருப்பேரிலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் திருவடிகளைச் சேர்வது எனக்கு எளிதாக இருக்கிறதே, இது என்ன அதிசயம்!