நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 4

செ.குளோரியான்


பாடல் 4

எளிது ஆயினவாறு என்று என் கண்கள் களிப்ப
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்,
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப்பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே.

எம்பெருமானின் திருவருள் கிடைக்க அரியது; அத்தகைய திருவருள் எனக்கு எளிதாகக் கிடைத்ததை எண்ணி, பெருமானைக் கண்டு என்னுடைய கண்கள் களிக்கின்றன, சிந்தையெல்லாம் அவருடைய பெருமை நிறைகிறது, நான் மகிழ்ச்சியில் திளைக்கிறேன், கிளிகள் தாவும் சோலைகள் சூழ்ந்த திருப்பேரிலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமான், தெளிவான, உயர்வான பரமபதத்தை எனக்குத் தருவான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT