நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 9

செ.குளோரியான்

பாடல் 9

இன்று என்னைப் பொருள் ஆக்கித் தன்னை என்னுள் வைத்தான்,
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என்செய்வான்?
குன்று என்னத் திகழ் மாடங்கள்சூழ் திருப்பேரான்
ஒன்று எனக்கு அருள்செய்ய உணர்த்தலுற்றேனே.

எம்பெருமான் இன்றைக்கு என்னை ஒரு பொருளாகக் கருதித் தன்னை எனக்குள் வைக்கிறான், ஆனால் அன்றைக்கு, என்னைப் பொருட்படுத்தாமல் வெளியே வைத்திருந்தான், இது ஏனோ? குன்றுகளைப்போல் திகழ்கிற மாடங்களால் சூழப்பட்ட திருப்பேர் நகரிலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் இதனை விளக்கவேண்டும், எனக்கு அருள்புரியவேண்டும் என்று வேண்டுகிறேன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT