நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 6

செ.குளோரியான்

பாடல் 6

வேள்வியுள் மடுத்தலும், விரை கமழ் நறும் புகை,
காளங்கள், வலம்புரி கலந்து எங்கும் இசைத்தனர்,
ஆளு,மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே.

வேதங்களிலே வல்லவர்கள் தாங்கள் செய்த வேள்விகளின் பலன்களை எம்பெருமான் அடியவர்களுக்குச் சமர்ப்பித்ததும், சிலர் நறுமணம் கமழ்கிற நல்ல புகையை எங்கும் பரப்பினார்கள், வேறு சிலர், காளங்கள், வலம்புரிச் சங்குகளை எங்கும் இசைத்தார்கள், வாள்போன்ற, ஒளிநிறைந்த கண்களையுடைய பெண்கள், ‘சக்ராயுதத்தை ஏந்திய எம்பெருமானுடைய அடியவர்களாகிய நீங்கள் வானகத்தை ஆளுங்கள்’ என்று மகிழ்ந்து வாழ்த்தினார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT