நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 5

செ.குளோரியான்

பாடல் 5

போரவிட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால், பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை, அந்தோ, எனது என்பது என், யான் என்பது என்,
தீர இரும்பு உண்ட நீர் அதுபோல என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே.

எம்பெருமானே, நீ என்னைக் கைவிட்டு வேறுபக்கம் செல்லலாமா? அப்படிச் சென்றால் நான் யாரைத் துணையாகக் கொள்வேன்? எதைச் செய்வேன்? உன்னைத்தவிர எனக்கென்று ஏதேனும் உண்டா? நீயில்லையேல் நான் என்பதுதான் உண்டா? அடடா. இரும்பானது தன்னுடைய வெம்மையைத் தணித்துக்கொள்வதற்காக நீரை உண்பதுபோல நீ என்னுடைய அரிய உயிரை முழுமையாகப் பருகினாய், எனக்கு ஆரா அமுதமாக ஆனாய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

SCROLL FOR NEXT