நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 5

செ.குளோரியான்

பாடல் 5

நண்ணா அசுரர் நலிவு எய்த, நல்ல அமரர் பொலிவு எய்த,
எண்ணாதனகள் எண்ணும் நல் முனிவர் இன்பம் தலை சிறப்ப,
பண் ஆர் பாடல், இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி,
தென்னா என்னும் என் அம்மான் திருமாலிருஞ்சோலையானே.

எம்பெருமான், பண்ணோடு அமைந்த பாடல்கள், இனிய கவிதைகளை என் உருவில் பாடிக்கொண்டான், தன்னைத் தானே பாடிக்கொண்டான். அந்தப் பாடல்களைக் கேட்டு, நற்செயல்களோடு பொருந்தாத அசுரர்கள் நலிகிறார்கள், நல்ல அமரர்கள் பொலிவடைந்து சிறக்கிறார்கள், மற்றவர்கள் எண்ணாத அளவுக்குப் பெருமானின் நற்குணங்களைச் சிந்திக்கும் நல்ல முனிவர்கள் மகிழ்கிறார்கள், அத்தகைய பெருமான் திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளியிருக்கிறான், அந்த அம்மானை எல்லாரும் ‘தென்னா, தென்னா’ என்று போற்றுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT