முகப்பு
நூல் அரங்கம்

தமிழர் நாடு

அவசியம் படித்தறிந்துகொள்ள வேண்டிய வரலாற்றாவண நூல்கள் இவை.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.வி.- இன் தமிழர் நாடு (இரண்டு பாகங்கள்) - தொகுப்பு - பதிப்பாசிரியர்: கோ. வீரமணி; பக்.1318; ரூ.1,400; காவ்யா, சென்னை-24; ✆ 044 -2372 6882.

திராவிட இயக்க நோக்கிலான அரசியலிலிருந்து விலகி, தமிழ்த் தேசிய சிந்தனைகளை முன்னெடுக்கும் விதமாகத் தமிழர் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கிய அறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம், 1947-இல் தமிழர் நாடு என்ற வார இதழையும் தொடங்கினார். ஓராண்டில் நிறுத்தப்பட்ட இதழ் மீண்டும், 1949, ஆகஸ்ட் முதல் மாத இதழாக இரு ஆண்டுகள் வெளிவந்தது.

இவ்விரு ஆண்டுகளில் வெளிவந்த 24 இதழ்களில் தமிழர் நாடு இதழில் இடம் பெற்றிருந்த விஷயங்கள் அனைத்தும் கி.ஆ.பெ.வி.யின் மகள்வழிப் பேரன் கோ. வீரமணியின் முயற்சியால் தொகுக்கப்பட்டு இரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.

Advertisement

தலையங்கம், செய்திகள், மொழி - இன அரசியல் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் என்று தனித்தனித் தலைப்புகளில் பிரித்து தொகுப்புகளின் பொருள்களை வகைப்படுத்தியுள்ளார்.

முதல் தலையங்கத்திலேயே, 'தமிழ்நாடு இவ்வளவு பெரிய நாடாக இருந்தும் தமிழ் மக்களிற் பலருக்குத் தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழ் மக்கள் என்ற உணர்ச்சி போதுமான அளவிற்கு இன்னும் உண்டாகவில்லை' என்று கூறுகிறார். தலையங்கங்கள் பெரும்பாலும் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்பனவற்றைச் சுற்றியே மிகக் கூரானவையாக இருக்கின்றன.

செய்திகளிலும்கூட, தன்னுடைய கருத்துகளையும் விமர்சனங்களையும் பதிவு செய்துள்ள கி.ஆ.பெ.வி., திமுக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் அன்றே குறிப்பிட்டிருக்கிறார்.

பெரியார் ஈ.வெ.ரா.வையும் திராவிடர் கழகத்தையும் கடுமையாக விமர்சித்து 'எவனெழுதினாலென்ன' என்ற புனைபெயரில் எழுதப்பட்ட கட்டுரைகள் வந்திருக்கின்றன.

தமிழ்நாடு அரசியலில் திராவிடம், தமிழ்த் தேசியம் என்ற கருத்துநிலைகள் விரிவாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற இந்த காலகட்டத்தில் இரு தரப்பினருமே அவசியம் படித்தறிந்துகொள்ள வேண்டிய வரலாற்றாவண நூல்கள் இவை.

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.வி.- இன் தமிழர் நாடு (இரண்டு பாகங்கள்) - தொகுப்பு - பதிப்பாசிரியர்: கோ. வீரமணி; பக்.1318; ரூ.1,400; காவ்யா, சென்னை-24; ✆ 044 -2372 6882.

திராவிட இயக்க நோக்கிலான அரசியலிலிருந்து விலகி, தமிழ்த் தேசிய சிந்தனைகளை முன்னெடுக்கும் விதமாகத் தமிழர் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கிய அறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம், 1947-இல் தமிழர் நாடு என்ற வார இதழையும் தொடங்கினார். ஓராண்டில் நிறுத்தப்பட்ட இதழ் மீண்டும், 1949, ஆகஸ்ட் முதல் மாத இதழாக இரு ஆண்டுகள் வெளிவந்தது.

இவ்விரு ஆண்டுகளில் வெளிவந்த 24 இதழ்களில் தமிழர் நாடு இதழில் இடம் பெற்றிருந்த விஷயங்கள் அனைத்தும் கி.ஆ.பெ.வி.யின் மகள்வழிப் பேரன் கோ. வீரமணியின் முயற்சியால் தொகுக்கப்பட்டு இரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.

தலையங்கம், செய்திகள், மொழி - இன அரசியல் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் என்று தனித்தனித் தலைப்புகளில் பிரித்து தொகுப்புகளின் பொருள்களை வகைப்படுத்தியுள்ளார்.

முதல் தலையங்கத்திலேயே, 'தமிழ்நாடு இவ்வளவு பெரிய நாடாக இருந்தும் தமிழ் மக்களிற் பலருக்குத் தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழ் மக்கள் என்ற உணர்ச்சி போதுமான அளவிற்கு இன்னும் உண்டாகவில்லை' என்று கூறுகிறார். தலையங்கங்கள் பெரும்பாலும் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்பனவற்றைச் சுற்றியே மிகக் கூரானவையாக இருக்கின்றன.

செய்திகளிலும்கூட, தன்னுடைய கருத்துகளையும் விமர்சனங்களையும் பதிவு செய்துள்ள கி.ஆ.பெ.வி., திமுக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் அன்றே குறிப்பிட்டிருக்கிறார்.

பெரியார் ஈ.வெ.ரா.வையும் திராவிடர் கழகத்தையும் கடுமையாக விமர்சித்து 'எவனெழுதினாலென்ன' என்ற புனைபெயரில் எழுதப்பட்ட கட்டுரைகள் வந்திருக்கின்றன.

தமிழ்நாடு அரசியலில் திராவிடம், தமிழ்த் தேசியம் என்ற கருத்துநிலைகள் விரிவாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற இந்த காலகட்டத்தில் இரு தரப்பினருமே அவசியம் படித்தறிந்துகொள்ள வேண்டிய வரலாற்றாவண நூல்கள் இவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments