தினம் ஒரு தேவாரம்

85. கற்றவர்கள் உண்ணும் கனியே - பாடல் 4

என். வெங்கடேஸ்வரன்


பாடல் 4


    பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
          பூதப்படை உடையாய் போற்றி போற்றி
    மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய் போற்றி
          மறியேந்து கையானே போற்றி போற்றி
    உன்னும் அவர்க்கு உண்மையனே போற்றி போற்றி
          உலகுக்கு ஒருவனே போற்றி போற்றி
    சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
          திருமூலட்டானனே போற்றி போற்றி



விளக்கம்:


உன்னுதல்=நினைத்தல்:

பொழிப்புரை:

பொன் போல் ஒளிரும் திருமேனியை உடையவனே, பூத கணங்களைப் படையாகக் கொண்டவனே, சிறப்பாக நிலை பெற்ற நான்கு வேதங்களாய் இருப்பவனே, மான் கன்றினை கையில் ஏந்தியவனே, உன்னை நினைத்து தியானிப்பவர் மெய்ப்பொருளாக உன்னை உணரும் வண்ணம் செய்பவனே, உலகுக்கு ஒப்பற்ற ஒரே தலைவனே, தலையில் வெண்பிறையை சூடியவனே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT