தினம் ஒரு தேவாரம்

97. மந்திர மறையவை - பாடல் 10

என். வெங்கடேஸ்வரன்


பாடல் 10:

    போதியர் பிண்டியர் பொருத்தம் இல்லிகள்
    நீதிகள் சொல்லியும் நினைய கிற்கிலார்
    வேதியர் பரவு வெண்காடு மேவிய
    ஆதியை அடி தொழ அல்லல் இல்லையே

விளக்கம்:

போதியர்=போதி மரத்தை வழிபடும் புத்தர்கள்; பிண்டியர்கள்=அசோக மரத்தினை வழிபடும் சமணர்கள்; பெருமானின் தன்மைகளை பெருமைகளை குறிப்பிடும் உண்மையான சொற்களை சொல்லாமல் இருக்கும் புத்தர்கள் மற்றும் சமணர்கள் மீது இரக்கம் கொண்டு, நல்வாழ்க்கை அமையாதவர்கள் என்று சம்பந்தர் இங்கே கூறுவதாக உரையாசிரியர்கள் விளக்கம் கூறுகின்றனர். பொருத்தம்=பொருத்தமான நல்வாழ்கை;  

பொழிப்புரை:

போதி மரத்தினை வழிபடும் புத்தர்களும் அசோக மரத்தினை வழிபடும் சமணர்ளும், பொருத்தமான நல்வாழ்க்கை இல்லாதவராக, பெருமானின் இயல்புகள் பெருமைகளை உணர்த்தும் உண்மையான சொற்களை பேசுவதையும்
நினைப்பதையும் செய்யாமல் இருக்கின்றனர். வேதம் ஓதிய அந்தணர்கள் புகழ்ந்து பாடி துதிக்க திருவெண்காடு தலத்தில் வீற்றிருக்கும் இறைவனை, அனைவர்க்கும் ஆதியாக விளங்கும் பெருமானை தொழும் அடியார்களுக்கு துன்பம்இல்லையாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாக்குர் மீது பேச்சுக்கு சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்தில் புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT