தினம் ஒரு தேவாரம்

121. அரனை உள்குவீர் - பாடல் 8

என். வெங்கடேஸ்வரன்

பாடல் 8:

    நறவம் ஆர் பொழில்
    புறவ நற்பதி
    இறைவன் நாமமே 
    மறவல் நெஞ்சமே

விளக்கம்:

தினமும் இறைவனின் புகழினைப் பாடி வாழ்வினில் உய்வினை அடையவேண்டும் என்று சென்ற பாடலில் நமக்கு அறிவுரை கூறிய சம்பந்தர், அதனை மீண்டும் வலியுறுத்தும் வண்ணம், இறைவனின் திருநாமத்தை மறவாது நமது நெஞ்சம் இருக்க வேண்டும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். நறவம்=தேன்; 
   
பொழிப்புரை:

தேன் நிறைந்த பூக்கள் உடைய பூஞ்சோலைகள் நிறைந்ததும், அடியார்களுக்கு பல நன்மைகளை விளைவிப்பதும், புறவம் என்று அழைக்கப் படுவதும் ஆகிய சீர்காழி தலத்தில் உறையும் இறைவனின் திருநாமங்களை, உலகத்தவரே, மறவாது உங்களது நெஞ்சத்தில் வைப்பீர்களாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT