தினம் ஒரு தேவாரம்

134. முந்தி நின்ற வினைகள் - பாடல் 8

என். வெங்கடேஸ்வரன்

பாடல் 8:

    மலையதனார் உடைய மதில் மூன்றும்
    சிலை அதனால் எரித்தார் திருப்புன்கூர்த்
    தலைவர் வல்ல அரக்கன் தருக்கினை
    மலை அதனால் அடர்த்து மகிழ்ந்தாரே

விளக்கம்:

மலையதனார்=மலையது அன்னார், மலை போன்று வலிமை உடையவர்கள்; அடர்த்தல்= நெருக்குதல்; மலைதல் என்ற சொல்லுக்கு சண்டை போடுதல் என்று ஒரு பொருளும் உள்ளது. தேவர்களுடன் போரிட்ட திரிபுரத்து அரக்கர்கள் என்றும் பொருள் சிலர் கொள்கின்றனர். மலைத்தல் என்றால் மலைத்து திகைத்து இருத்தல் என்று ஒரு பொருள். இந்த அடிப்படையில் தங்களது பகைவர்கள் திகைத்து நிற்கும் வண்ணம் வலிமை கொண்ட திரிபுரத்து அரக்கர்கள் என்றும் பொருள் கூறப்படுகின்றது.

பொழிப்புரை:

மலை போன்று வலிமை பொருந்திய திரிபுரத்து அரக்கர்கள் கொண்டிருத்த மூன்று பறக்கும் கோட்டைகளையும், மேருமலையினை வளைத்து செய்யப்பட்ட வில்லில் கூரிய அம்பினைப் பொருத்தி எரித்தவர் சிவபெருமான். அவரே திருப்புன்கூர் தலத்தின் தலைவராக திகழ்கின்றார். வலிமை வாய்ந்த அரக்கன் இராவணன் மிகுந்த செருக்குடன், கயிலாய மலையினைப் பேர்த்து எடுப்பேன் என்ற எண்ணத்துடன் முயற்சி செய்த போது, அந்த கயிலை மலையின் மீது தனது கால் பெருவிரலை அழுத்தி, மலையின் கீழே அரக்கனை நெருக்கி அவனது வலிமையை அழித்து, பின்னர் அரக்கனின் சாமகானத்தை கேட்டு மகிழ்ந்து பல வரங்கள் அளித்தவர் பெருமான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT