முகப்பு
விளையாட்டு

மாநில ஹாக்கிப் போட்டி : அரையிறுதியில் ஐ.சி.எஃப், தெற்கு ரயில்வே அணிகள்

திருச்சி, மே 3 : திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியின் அரையிறுதிக்கு ஐ.சி.எஃப், தெற்கு ரயில்வே, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய அணிகள் முன்னேறியுள்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 6:36 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 10:42 PM

திருச்சி, மே 3 : திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியின் அரையிறுதிக்கு ஐ.சி.எஃப், தெற்கு ரயில்வே, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன.

திருச்சி ஜோ ஜோ ஹாக்கி சங்கம் சார்பில், தினேஷ் பி. கண்ணா நினைவு 2-ம் ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டி திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.

வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டங்களில் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை அணி 7-0 என்ற கோல் கணக்கில் மதுரை ரிசர்வ் லயன் அணியை வென்றது. சிறப்புக் காவல்படை அணி வீரர்கள் டேவிட் ஆரோக்கியராஜ் 3 கோல்களும், கந்தகுரு 2 கோல்களும், கண்ணன், ரகு ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

Advertisement

தெற்கு ரயில்வே அணி 5-1 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கி அணியை வென்றது. தெற்கு ரயில்வே வீரர்கள் மனோஜ் 2 கோல்களும், திவாகரன், மகேந்திர சிங், ஜயராஜ் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

சென்னை ஐ.சி.எஃப். அணி 3-2 என்ற கோல் கணக்கில் மத்திய கலால் துறை அணியை வென்றது. ஐ.சி.எப். வீரர்கள் அசோக்குமார் 2 கோல்களும், ஷியாம்குமார் ஒரு கோலும் அடித்தனர்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 9-0 என்ற கோல் கணக்கில் வாடிப்பட்டி எவர்கிரேட் அணியை வென்றது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வீரர்கள் வினோத் ராயர், பி. தாமு ஆகியோர் தலா 3 கோல்களும், எம்.கே. முட்டப்பா, கரியப்பா, அருள் ஸ்டாலின் ஆகியோர் தலா ஒரு கோலும்

அடித்தனர்.

காலிறுதியில் வெற்றி கண்ட 4 அணிகளும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டங்களில் விளையாடுகின்றன. இறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.