விளையாட்டு

ஆஷஸ்: இங்கிலாந்து 331 ரன்கள் முன்னிலை!

ரூட் அபாரமாக ஆடி 130 ரன்களில் ஆட்டமிழந்தார்.

எழில்

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 4-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 331 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் இந்தத் தொடரை கைப்பற்றிவிடலாம் என்ற முனைப்பில் வியாழக்கிழமை தொடங்கிய 4-ஆவது போட்டியை இங்கிலாந்து எதிர்கொண்டது.

டாஸ் வென்ற அந்த அணியின் கேப்டன் அலஸ்டர் குக் எதிரணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். யாரும் எதிர்பாராத விதத்தில் முதல் இன்னிங்ஸில் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் ஆட்டம் கண்ட ஆஸ்திரேலியா 60 ரன்களில் சுருண்டது. 18.3 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் பின்னர் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஆடம் லைத் 14 ரன்களிலும், இயான் பெல் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் குக் 43 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இவர்கள் 3 பேரும் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் ஜோ ரூட் - ஜானி பேர்ஸ்டோ விக்கெட் சரிவை தடுத்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

முதல்நாள் முடிவில், 65 ஓவர்களில், இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாவது நாளான இன்றும் தனது ஆதிக்கத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்தது. ரூட் அபாரமாக ஆடி 130 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக 85.2 ஓவர்களில் 391 ரன்கள் எடுத்திருந்தபோது தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது இங்கிலாந்து. இதனால் அந்த அணி 331 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் எடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT