கேலேவில் தொடங்கியுள்ள இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய பவுலர்களின் அசத்தலான பந்துவீச்சால் இலங்கை அணி 23 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
முதல் டெஸ்டில், டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில், தவான், ராகுல், ரோஹித் சர்மா, கோலி, ரஹானே, சஹா, அஸ்வின், ஹர்பஜன் சிங், மிஸ்ரா, ஆரோன், இஷாந்த் சர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளார்கள்.
எட்டு ஓவருக்குள் தொடக்க வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய அணி. கருணாரத்னே, இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் 9 ரன்களிலும் சில்வா, ஆரோன் பந்துவீச்சில் 5 ரன்களிலும் ஆட்டம் இழந்தார்கள். பிறகு தனது அசத்தலான பந்துவீச்சால் சங்கக்காரா(5), லஹிரு திரிமானி(13), முபாரக் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார்.
இதனால் உணவு இடைவேளையின்போது 23 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது இலங்கை அணி. மேத்யூஸ் 26, சண்டிமல் 5 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.