சங்ககாராவுக்கு நினைவுப் பரிசு வழங்கிய பிசிசிஐ!
சங்ககாரா எப்போதும் நன்றாக விளையாடியவர். அவருடைய அடுத்த இன்னிங்ஸுக்கு வாழ்த்துகள்
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியுடன் இலங்கை அணியின் மூத்த வீரர் குமார் சங்ககாரா ஓய்வு பெறுகிறார். இது அவருடைய 134-வது டெஸ்ட் போட்டி.
அவருக்கு இன்று பிசிசிஐ சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர் சங்ககாராவுக்கு இந்தப் பரிசை வழங்கினார்.
சங்ககாரா எப்போதும் நன்றாக விளையாடியவர். அவருடைய அடுத்த இன்னிங்ஸுக்கு வாழ்த்துகள் என்று தாக்கூர் சங்ககாராவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.
Advertisement