விளையாட்டு

சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகளின் உரிமையாளர்களை மாற்றுவது குறித்து பிசிசிஐ முடிவு செய்யும்: ஆர்.எம்.லோதா

கிரிக்கெட் தான் பெரிது என்றால் வீரர்கள் மற்றும் அணிகளுக்கு ஏற்படும் பண இழப்புகள் முக்கியமல்ல. சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகளை வேறு நிறுவனங்களுக்கு விற்பது குறித்து பிசிசிஐதான் முடிவு செய்யவேண்டும்.

எழில்

லோதா தலைமையிலான விசாரணைக் குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீதான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.

லோதா குழுவின் அறிக்கையில் இன்று கூறியபடி, ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க இந்தியா சிமெண்ட்ஸ் (சென்னை சூப்பர் கிங்ஸ்) மற்றும் ஜெய்ப்பூர் ஐபிஎல் (ராஜஸ்தான் ராயல்ஸ்) அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அறிக்கையை வெளியிட்டபிறகு நிருபர்களின் கேள்விக்கு உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா பதிலளித்தபோது கூறியதாவது:

கிரிக்கெட் தான் பெரிது என்றால் வீரர்கள் மற்றும் அணிகளுக்கு ஏற்படும் பண இழப்புகள் முக்கியமல்ல. சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகளை வேறு நிறுவனங்களுக்கு விற்பது குறித்து பிசிசிஐதான் முடிவு செய்யவேண்டும். பிசிசிஐயை சீரமைப்பது, பிசிசிஐ அமைப்பில் நிர்வாகிகளாக இருப்பவர்களின் வர்த்தக இரட்டை நலன் (conflict of interest) போன்றவை குறித்து இன்னமும் முடிவுகள் எடுக்கப்படவில்லை. நாங்கள் இன்னமும் விசாரித்துக்கொண்டிருக்கிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT