விளையாட்டு

இனி எல்லா நோ பால்களும் ஃப்ரீஹிட்தான்! ஐசிசி அதிரடி அறிவிப்பு

இந்த விதிமுறைகள் ஜூலை 5 முதல் அமலுக்கு வரும். 

எழில்

ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கமிட்டி)-யின் வருடாந்தர கூட்டம் நேற்று நடந்தது. ஐசிசி தலைவர் என்.சீனிவாசன், தலைமைச் செயல் அதிகாரி ரிச்சர்ட்சன் ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், டெக்னிக்கல் கமிட்டியின் பரிந்துரைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. பின்னர் ஒருநாள் போட்டி விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து ரிச்சர்ட்சன் தெரிவித்ததாவது:

* இனி பேட்டிங் பவர்பிளே கிடையாது.

* கடைசி 10 ஓவர்களுக்கு (40-50) வட்டத்துக்கு வெளியே 5 ஃபீல்டர்களை நிறுத்திக்கொள்ளலாம். அதாவது முதல் 10 ஓவர்களுக்கு வட்டத்துக்கு வெளியே இரண்டு ஃபீல்டர்கள்; 11-40 ஓவர்கள் வரை 4 ஃபீல்டர்கள்; 40-50 ஓவர்களின்போது 5 ஃபீல்டர்கள் இருப்பார்கள்.

* முதல் 10 ஓவர்களில், 2 கேட்சர்களை பேட்ஸ்மேனுக்கு அருகில் நிறுத்தவேண்டிய அவசியமில்லை.

* அனைத்து வகை நோபால்களும் இனி ஃப்ரீஹிட்

இந்த விதிமுறைகள் ஜூலை 5 முதல் அமலுக்கு வரும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT