விளையாட்டு

தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகள்: விசாரணை நடத்த முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவு

தில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு இரு நபர் கொண்ட குழுவை அமைத்து முதல் அமைச்சர் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.

PTI

தில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு இரு நபர் கொண்ட குழுவை அமைத்து முதல் அமைச்சர் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.

தில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து, அந்த புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்கு கேஜரிவால் உத்தரவிட்டார். ஊரக வளர்ச்சி துறை மற்றும் விளையாட்டு துறை சேர்ந்த செயலர்கள் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

அவர்கள் தங்களது விசாரணை அறிக்கையை சனிக்கிழமைக்குள் முதல்வரிடம் சமர்ப்பிப்பார்கள் என அரசு வட்டாரங்கள் கூறின.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரும், தில்லியை சேர்ந்தவருமான கவுதம் கம்பீர் முதல்வர் கேஜரிவாலை இன்று சந்தித்து, இந்த விவகாரம் குறித்து விவாதித்தார்.  சிலநாள்களுக்கு முன்பு முன்னாள் சுழல்பந்துவீச்சாளர் பிஷன்சிங் பேடி, கேஜரிவாலை சந்தித்து தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகள் குறித்து புகார் அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT