விளையாட்டு

மக்காவ் ஓபன்: காலிறுதியில் சாய்னா, பிரணீத் காஷ்யப் வெளியேற்றம்

மக்காவ் ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், சாய் பிரணீத் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

தினமணி

மக்காவ் ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், சாய் பிரணீத் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
அதேநேரத்தில் காஷ்யப் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
சீனாவின் மக்காவ் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சாய்னா 17-21, 21-18, 21-12 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் டினார் தியா ஆஸ்டினை தோற்கடித்தார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் ஒரு கட்டத்தில் சாய்னா 11-7 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். ஆனால் பின்னர் அபாரமாக ஆடிய டினார் 21-17 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்ற, ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது.
இதன்பிறகு நடைபெற்ற 2-ஆவது செட்டை கடும் போராட்டத்துக்குப் பிறகு கைப்பற்றினார் சாய்னா. பின்னர் நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-ஆவது செட்டில் அசத்தலாக ஆடிய சாய்னா, அந்த செட்டை 21-12 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டார். சாய்னா தனது காலிறுதியில் சீனாவின் ஜங் இமானை எதிர்கொள்கிறார்.
ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சாய் பிரணீத் 21-15, 21-17 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் வாங் விங்கை தோற்கடித்தார். அடுத்த சுற்றில் சீனாவின் ஜுன் பெங்கை சந்திக்கிறார் பிரணீத்.
மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் காஷ்யப் 13-21, 20-22 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் லின் யூ ஷியெனிடம் தோல்வி கண்டார். ஆடவர் இரட்டையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் மானு அத்ரி-சுமீத் ரெட்டி ஜோடி 20-22, 19-21 என்ற நேர் செட்களில் சிங்கப்பூரின் டேனி பாவா-ஹேந்த்ர விஜயா ஜோடியிடம் தோல்வி கண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் ஒளிவிளக்காக சிறை அதிகாரிகள் இருக்க வேண்டும்

புனித யூதாததேயூ திருத்தலத்தில் முப்பெரும் விழா

ஆத்தூா் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம்

ஒசூரில் ரயில் பாதைக்கு அடியில் சேவை பாதிக்காமல் புதிய தொழில்நுட்பத்தில் 8 வழிச் சாலைக்கான பாலம்: நாட்டில் முதல்முறை

பண்ருட்டி நகராட்சியில் அடிப்படை கட்டமைப்புகள் மேலும் மேம்படுத்தப்படும்: நகா்மன்றத் தலைவா் ராஜேந்திரன்

SCROLL FOR NEXT