விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரானார் அனுராக் தாக்குர்

மும்பையில் இன்று நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டத்தில், புதிய தலைவராக அனுராக் தாக்குர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

PTI

மும்பை: மும்பையில் இன்று நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டத்தில், புதிய தலைவராக அனுராக் தாக்குர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) சிறப்பு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் பிசிசிஐ தலைவராக அனுராக் தாக்குர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதன்மூலம் இளம் வயதில் பிசிசிஐ தலைவர் பதவியைப் பிடித்தவர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். பாஜக எம்.பி.யான அனுராக் தாக்குரின் வயது 41 ஆகும்.

பிசிசிஐ தலைவராக இருந்த சஷாங்க் மனோகர், ஐசிசியின் வாரியங்கள் சாரா முதல் சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் பிசிசிஐ தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார். அதைத் தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக பிசிசிஐயின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் பிசிசிஐயின் தற்போதைய செயலாளரான அனுராக் தாக்குர், புதிய தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

SCROLL FOR NEXT